“பயம் வேண்டாம். நவீன கருவி “
என்றார் தர்மர்.
தருமரே சொல்லி விட்டார் என்றனர் மக்கள்.
“ நாம் வளம் பெற இதுவே வழி “
என்றார் பீமர்.
“ம்” கொட்டினர் மக்கள்.
கட்டப்பட்ட கைகளை விடுவிக்க எத்தனித்த போது
“ போராட்டம் வேண்டாம். பணிந்து செல்” என்றார் அர்சுனர்.
இது வன்முறை அல்லவா என்றனர் மக்கள்
மரண ஓலத்தில் அரற்றியவனை
“ பொய்யாக நடிக்காதே “ என்றனர் நகுல சகாதேவர்.
அனைத்தும் ஏமாற்று வேலை என்றனர் மக்கள்.
கழுத்து பலிபீடத்தைத் தழுவியது.
அரவான் கண் உயர்த்திப் பார்க்கிறான்.
நாரயணர் குறுநகையோடு புன்னகைக்கிறார்.
வழுக்கிக் கொண்டு இறங்குகிறது
கில்லட்டின்
அவன் கழுத்தைக் குறி வைத்து.
என்றார் தர்மர்.
தருமரே சொல்லி விட்டார் என்றனர் மக்கள்.
“ நாம் வளம் பெற இதுவே வழி “
என்றார் பீமர்.
“ம்” கொட்டினர் மக்கள்.
கட்டப்பட்ட கைகளை விடுவிக்க எத்தனித்த போது
“ போராட்டம் வேண்டாம். பணிந்து செல்” என்றார் அர்சுனர்.
இது வன்முறை அல்லவா என்றனர் மக்கள்
மரண ஓலத்தில் அரற்றியவனை
“ பொய்யாக நடிக்காதே “ என்றனர் நகுல சகாதேவர்.
அனைத்தும் ஏமாற்று வேலை என்றனர் மக்கள்.
கழுத்து பலிபீடத்தைத் தழுவியது.
அரவான் கண் உயர்த்திப் பார்க்கிறான்.
நாரயணர் குறுநகையோடு புன்னகைக்கிறார்.
வழுக்கிக் கொண்டு இறங்குகிறது
கில்லட்டின்
அவன் கழுத்தைக் குறி வைத்து.