Wednesday 9 January 2013

ஒரு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை -1

பாதுகாக்கப்படும் காட்டிற்குள் அலைந்து திரியும் சிங்கமாகவோ புலியாகவோ இருக்க எனக்கு விருப்பமில்லை. கண்டங்கள் தாண்டிப் பறக்கும் ஒரு சிறிய பறவையாக இருக்க விரும்புகிறேன்.

-------------------------------------------------------------

சில மரங்கள் 
விலகிச் செல்கின்றன
வருத்தம்தான்.
சில மரங்கள்
நெருங்கி வருகின்றன
மகிழ்ச்சிதான் .
இந்த
ரயில்
பயணத்தில்

-------------------------------------------------------------

ஓடி விளையாடிய
ஆற்றை
ஏக்கமாகப் பார்த்தது
கையில் அடைபட்டிருந்த
பாட்டில் நீர்.
காணப் பொறுக்காது
ஆற்றோடு கை சேர்த்து
அனுப்பினேன்.
நெகிழ்ச்சியுடன் அது
கத்திக் கொண்டே சொன்னது
என் காதில் விழவில்லை
நன்றியாகத்தான் இருக்கும்.

-------------------------------------------------------------
பாதி தொங்கு மீசையாய்
தன் கழுத்தில் பதிந்த
மிகுகூர் வாளினை
உயிர்பயத்தில் குளீரூட்ட முயன்ற
அரவானின் வியர்வைத் துளிகளை
உலர்த்திக் கொண்டிருந்தது
இச்சைக்காக சொந்தம் இழக்கத்
தயாரான பாண்டவர்களின்
நிம்மதிப் பெருமூச்சு.


No comments:

Post a Comment