கடந்து சென்ற
அந்த உதவுகை ஊர்தியில்
இருப்பவருக்காக
சில மணித்துளிகள்
கண் மூடி பிரார்த்தித்த
அந்த சிறுவனின்
காலில் விழத் துடித்தது
மனசு
---------------------------------------------------------------------------------
முட்கள்
ஆவலோடு
நகர்கின்றன
எந்த
மணித்துளி
வரலாறாய்
மாறப் போகிறது ?
---------------------------------------------------------------------------------
சாராயம் குடிக்க
காசு தராததால்
அம்மிக் குழவி போட்டு
தலை நசுக்கப்பட்ட
ஆத்தா நினைத்தாளோ .
நண்பனோடு தெருவில்
நின்று பேசியதால்
சந்தேகப்பட்டு விஷம் வைத்து
சாகடிக்கப்பட்ட
மனைவி நினைத்தாளோ
ஜாதியை இகழ்ந்ததால்
தலைவெட்டிக்
கொல்லப்பட்ட
நண்பன் நினைத்தானோ
பேருந்தில்
கையில் விலங்கோடு
தும்மிக் கொண்டிருந்த
அந்த கைதியை .
யார் நினைத்திருப்பார் ?
அந்த உதவுகை ஊர்தியில்
இருப்பவருக்காக
சில மணித்துளிகள்
கண் மூடி பிரார்த்தித்த
அந்த சிறுவனின்
காலில் விழத் துடித்தது
மனசு
---------------------------------------------------------------------------------
முட்கள்
ஆவலோடு
நகர்கின்றன
எந்த
மணித்துளி
வரலாறாய்
மாறப் போகிறது ?
---------------------------------------------------------------------------------
சாராயம் குடிக்க
காசு தராததால்
அம்மிக் குழவி போட்டு
தலை நசுக்கப்பட்ட
ஆத்தா நினைத்தாளோ .
நண்பனோடு தெருவில்
நின்று பேசியதால்
சந்தேகப்பட்டு விஷம் வைத்து
சாகடிக்கப்பட்ட
மனைவி நினைத்தாளோ
ஜாதியை இகழ்ந்ததால்
தலைவெட்டிக்
கொல்லப்பட்ட
நண்பன் நினைத்தானோ
பேருந்தில்
கையில் விலங்கோடு
தும்மிக் கொண்டிருந்த
அந்த கைதியை .
யார் நினைத்திருப்பார் ?
---------------------------------------------------------------------------------
" என்னவாக விருப்பம் ?"
என்ற டீச்சரின் கேள்விக்கு
" எஞ்சினியர் , டாக்டர் , போலீஸ் " என்று
எதைச் சொல்வது என்று
குழப்பமாக சிந்திக்கும் தருணம்
வரவில்லை -
சிக்னலில் பிச்சை எடுக்கும்
சிறுவனுக்கு.
என்ற டீச்சரின் கேள்விக்கு
" எஞ்சினியர் , டாக்டர் , போலீஸ் " என்று
எதைச் சொல்வது என்று
குழப்பமாக சிந்திக்கும் தருணம்
வரவில்லை -
சிக்னலில் பிச்சை எடுக்கும்
சிறுவனுக்கு.
No comments:
Post a Comment