Thursday 10 January 2013

 “பயம் வேண்டாம். நவீன கருவி “
என்றார் தர்மர்.
தருமரே சொல்லி விட்டார் என்றனர் மக்கள்.
“ நாம் வளம் பெற இதுவே வழி “
என்றார் பீமர்.
“ம்” கொட்டினர் மக்கள்.
கட்டப்பட்ட கைகளை விடுவிக்க எத்தனித்த போது
“ போராட்டம் வேண்டாம். பணிந்து செல்” என்றார் அர்சுனர்.
இது வன்முறை அல்லவா என்றனர் மக்கள்
மரண ஓலத்தில் அரற்றியவனை
“ பொய்யாக நடிக்காதே “ என்றனர் நகுல சகாதேவர்.
அனைத்தும் ஏமாற்று வேலை என்றனர் மக்கள்.
கழுத்து பலிபீடத்தைத் தழுவியது.
அரவான் கண் உயர்த்திப் பார்க்கிறான்.
நாரயணர் குறுநகையோடு புன்னகைக்கிறார்.
வழுக்கிக் கொண்டு இறங்குகிறது
கில்லட்டின்
அவன் கழுத்தைக் குறி வைத்து.

No comments:

Post a Comment