Wednesday 9 January 2013

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை-3

குளிர் தணிக்க
நடுச் சாலையில் 
புணரும் 
அந்த இரு 
நாய்களையும் 
கல்லால் 
அடித்துப் பிரிக்கும் 
மனிதன் 
வானத்திலிருந்து 
தோன்றியவனோ ?

 -----------------------------------------------------------------------
பதறித் துடிக்கிறேன் நான் 
தண்டவாளத்திற்கு 
பக்கத்தில் உள்ள 
பூவில் 
துளி கூட 
பதட்டமின்றி 
உட்கார்ந்த 
பட்டாம்பூச்சியைப் 
பார்த்து


 -----------------------------------------------------------------------
கோழிகளுக்கு 
கதை சொல்லிக்
கொண்டிருக்கிறாள் சிறுமி

சிறுநீர் கழித்து முடித்ததும்
டவுசரில் துடைத்துக் கொண்டு
விளையாடச் செல்லும் சிறுவன்

பார்த்து ரசிக்க 
பொறுமையின்றி
ஓடிக் கொண்டிருக்கிறது ரயில்.


 -----------------------------------------------------------------------

கழிப்பறைகளால் 
அரசுக்கு வருவாய்
இல்லை என்பதை
இன்றைக்காவது 
சொல்லிவிடவேண்டும்-
தினமும் அரசை
சபித்தபடி 
சாலையோரத்தில் 
மலம் கழிக்கும் 
அந்த முதியவரிடம்

No comments:

Post a Comment