குளிர் தணிக்க
நடுச் சாலையில்
புணரும்
அந்த இரு
நாய்களையும்
கல்லால்
அடித்துப் பிரிக்கும்
மனிதன்
வானத்திலிருந்து
தோன்றியவனோ ?
-----------------------------------------------------------------------
பதறித் துடிக்கிறேன் நான்
தண்டவாளத்திற்கு
பக்கத்தில் உள்ள
பூவில்
துளி கூட
பதட்டமின்றி
உட்கார்ந்த
பட்டாம்பூச்சியைப்
பார்த்து
-----------------------------------------------------------------------
கோழிகளுக்கு
கதை சொல்லிக்
கொண்டிருக்கிறாள் சிறுமி
சிறுநீர் கழித்து முடித்ததும்
டவுசரில் துடைத்துக் கொண்டு
விளையாடச் செல்லும் சிறுவன்
பார்த்து ரசிக்க
பொறுமையின்றி
ஓடிக் கொண்டிருக்கிறது ரயில்.
-----------------------------------------------------------------------
கழிப்பறைகளால்
அரசுக்கு வருவாய்
இல்லை என்பதை
இன்றைக்காவது
சொல்லிவிடவேண்டும்-
தினமும் அரசை
சபித்தபடி
சாலையோரத்தில்
மலம் கழிக்கும்
அந்த முதியவரிடம்
நடுச் சாலையில்
புணரும்
அந்த இரு
நாய்களையும்
கல்லால்
அடித்துப் பிரிக்கும்
மனிதன்
வானத்திலிருந்து
தோன்றியவனோ ?
-----------------------------------------------------------------------
பதறித் துடிக்கிறேன் நான்
தண்டவாளத்திற்கு
பக்கத்தில் உள்ள
பூவில்
துளி கூட
பதட்டமின்றி
உட்கார்ந்த
பட்டாம்பூச்சியைப்
பார்த்து
-----------------------------------------------------------------------
கோழிகளுக்கு
கதை சொல்லிக்
கொண்டிருக்கிறாள் சிறுமி
சிறுநீர் கழித்து முடித்ததும்
டவுசரில் துடைத்துக் கொண்டு
விளையாடச் செல்லும் சிறுவன்
பார்த்து ரசிக்க
பொறுமையின்றி
ஓடிக் கொண்டிருக்கிறது ரயில்.
-----------------------------------------------------------------------
கழிப்பறைகளால்
அரசுக்கு வருவாய்
இல்லை என்பதை
இன்றைக்காவது
சொல்லிவிடவேண்டும்-
தினமும் அரசை
சபித்தபடி
சாலையோரத்தில்
மலம் கழிக்கும்
அந்த முதியவரிடம்
No comments:
Post a Comment