Wednesday 9 January 2013

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை -2

மூன்று தலைமுறை கண்ட வீடு 
தன் கதையை 
ஒரு மணித்துளி 
தூவலின் நடனத்தில் 
முடித்துக் கொண்டது.

---------------------------------------------------------------------------
அறுபத்தி நான்கு துளை 
நீர்த்தூவியிலிருந்து 
பீறிட்டு வந்த 
நீர் உக்கிரமாக
அழித்துக் கொண்டிருந்தது 
நேற்றிரவு 
குழந்தையின் உதடுகளையும் 
கணவன் கை விரல்களையும் .

---------------------------------------------------------------------------

அப்பாவின் மரணத்தைக் 
காட்டிலும் பதட்டமடையச்
செய்கின்றன - விசாரிப்பவர்களின் 
கேள்விகள்

---------------------------------------------------------------------------
வண்னத்துப்பூச்சியின் சிறகுகளாய்
படபடத்து வழியெங்கும் 
கை அசைத்து 
வழி அனுப்பிய
மொட்டுகளிடம் 
ஒரு சலனத்தையும் காட்டாத 
அவர்
எந்த முகத்தோடு 
வேண்டுவார் ஐயப்பனிடம்
வாழ்வில் மகிழ்ச்சி 
பெருக வேண்டும் என்று ?

No comments:

Post a Comment