மூன்று தலைமுறை கண்ட வீடு
தன் கதையை
ஒரு மணித்துளி
தூவலின் நடனத்தில்
முடித்துக் கொண்டது.
---------------------------------------------------------------------------
அறுபத்தி நான்கு துளை
நீர்த்தூவியிலிருந்து
பீறிட்டு வந்த
நீர் உக்கிரமாக
அழித்துக் கொண்டிருந்தது
நேற்றிரவு
குழந்தையின் உதடுகளையும்
கணவன் கை விரல்களையும் .
---------------------------------------------------------------------------
அப்பாவின் மரணத்தைக்
காட்டிலும் பதட்டமடையச்
செய்கின்றன - விசாரிப்பவர்களின்
கேள்விகள்
---------------------------------------------------------------------------
வண்னத்துப்பூச்சியின் சிறகுகளாய்
படபடத்து வழியெங்கும்
கை அசைத்து
வழி அனுப்பிய
மொட்டுகளிடம்
ஒரு சலனத்தையும் காட்டாத
அவர்
எந்த முகத்தோடு
வேண்டுவார் ஐயப்பனிடம்
வாழ்வில் மகிழ்ச்சி
பெருக வேண்டும் என்று ?
தன் கதையை
ஒரு மணித்துளி
தூவலின் நடனத்தில்
முடித்துக் கொண்டது.
---------------------------------------------------------------------------
அறுபத்தி நான்கு துளை
நீர்த்தூவியிலிருந்து
பீறிட்டு வந்த
நீர் உக்கிரமாக
அழித்துக் கொண்டிருந்தது
நேற்றிரவு
குழந்தையின் உதடுகளையும்
கணவன் கை விரல்களையும் .
---------------------------------------------------------------------------
அப்பாவின் மரணத்தைக்
காட்டிலும் பதட்டமடையச்
செய்கின்றன - விசாரிப்பவர்களின்
கேள்விகள்
---------------------------------------------------------------------------
வண்னத்துப்பூச்சியின் சிறகுகளாய்
படபடத்து வழியெங்கும்
கை அசைத்து
வழி அனுப்பிய
மொட்டுகளிடம்
ஒரு சலனத்தையும் காட்டாத
அவர்
எந்த முகத்தோடு
வேண்டுவார் ஐயப்பனிடம்
வாழ்வில் மகிழ்ச்சி
பெருக வேண்டும் என்று ?
No comments:
Post a Comment