Wednesday 9 January 2013

ஒரு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை -2

“ இப்படியாக
சீதாபிராட்டியார் ராமரைப் பிரிந்து
ஒரு வருட காலம் துயரப்பட்டார் “
என்று பிரசங்கம் செய்த
லட்சுமணனிடம்
“ 14 வருடம் உன்னைப் பிரிந்த
என் தவிப்பிற்கு முன் இது எம்மாத்திரம் ? “
என்றாள் ஊர்மிளா.

-----------------------------------------------------------

கதுப்பெங்கும் 
எழும்பத் தொடங்கின
வெள்ளைத் தூண்கள்
இருண்மையான வெளியை நோக்கி
வாதையில் விம்மின
பதின் பருவ குறும்புகள்
நசுங்கியபடி



-----------------------------------------------------------
என்
நாவிலிருந்து
ஏவுகணையாய் வீசப்பட்ட
பிராய்லர் இறகு போன்ற
நகத்தில்
படிந்திருக்கிறது
அவளது
முதுகு சதை



-----------------------------------------------------------
புல்லில்
அமர்ந்த
நீர்த்துளிக்குள்
அடங்கி இருந்தது
காட்டு யானை

No comments:

Post a Comment