“ இப்படியாக
சீதாபிராட்டியார் ராமரைப் பிரிந்து
ஒரு வருட காலம் துயரப்பட்டார் “
என்று பிரசங்கம் செய்த
லட்சுமணனிடம்
“ 14 வருடம் உன்னைப் பிரிந்த
என் தவிப்பிற்கு முன் இது எம்மாத்திரம் ? “
என்றாள் ஊர்மிளா.
-----------------------------------------------------------
கதுப்பெங்கும்
எழும்பத் தொடங்கின
வெள்ளைத் தூண்கள்
இருண்மையான வெளியை நோக்கி
வாதையில் விம்மின
பதின் பருவ குறும்புகள்
நசுங்கியபடி
-----------------------------------------------------------
என்
நாவிலிருந்து
ஏவுகணையாய் வீசப்பட்ட
பிராய்லர் இறகு போன்ற
நகத்தில்
படிந்திருக்கிறது
அவளது
முதுகு சதை
-----------------------------------------------------------
புல்லில்
அமர்ந்த
நீர்த்துளிக்குள்
அடங்கி இருந்தது
காட்டு யானை
சீதாபிராட்டியார் ராமரைப் பிரிந்து
ஒரு வருட காலம் துயரப்பட்டார் “
என்று பிரசங்கம் செய்த
லட்சுமணனிடம்
“ 14 வருடம் உன்னைப் பிரிந்த
என் தவிப்பிற்கு முன் இது எம்மாத்திரம் ? “
என்றாள் ஊர்மிளா.
-----------------------------------------------------------
கதுப்பெங்கும்
எழும்பத் தொடங்கின
வெள்ளைத் தூண்கள்
இருண்மையான வெளியை நோக்கி
வாதையில் விம்மின
பதின் பருவ குறும்புகள்
நசுங்கியபடி
-----------------------------------------------------------
என்
நாவிலிருந்து
ஏவுகணையாய் வீசப்பட்ட
பிராய்லர் இறகு போன்ற
நகத்தில்
படிந்திருக்கிறது
அவளது
முதுகு சதை
-----------------------------------------------------------
புல்லில்
அமர்ந்த
நீர்த்துளிக்குள்
அடங்கி இருந்தது
காட்டு யானை
No comments:
Post a Comment